என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆய்வில் தகவல்"

    • மாநில மருந்துகள் சோதனை ஆய்வகங்கள் 60 மருந்து மாதிரிகள் ‘‘நிலையான தரம் இல்லாதவை’’ என்று அடையாளம் கண்டுள்ளன.
    • சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து ஒரு மாதிரி, போலி மருந்தாக அடையாளம் காணப்பட்டது.

    புதுடெல்லி:

    வழக்கமான ஒழுங்குமுறை கண்காணிப்பு நடவடிக்கையின்படி, நிலையான தரம் இல்லாத (என்.எஸ்.கியூ) மற்றும் போலியான மருந்துகளின் பட்டியல் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் இணையதளத்தில் மாதாந்திர அடிப்படையில் காட்டப்படுகிறது.

    மத்திய மருந்துகள் ஆய்வகங்கள் செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர மருந்து எச்சரிக்கையில் பல்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட 52 மாதிரிகள் ''நிலையான தரம் இல்லாதவை'' என்று கண்டறிந்து உள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மாநில மருந்துகள் சோதனை ஆய்வகங்கள் 60 மருந்து மாதிரிகள் ''நிலையான தரம் இல்லாதவை'' என்று அடையாளம் கண்டுள்ளன.

    மருந்து மாதிரிகளை நிலையான தரம் இல்லாதவையாக அடையாளம் காண்பது என்பது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட தர அளவுருக்களில் மருந்து மாதிரியின் தோல்வியின் அடிப்படையில் செய்யப்படுகிறது. தோல்வி என்பது அரசாங்க ஆய்வகத்தால் சோதிக்கப்பட்ட தொகுப்பின் மருந்து தயாரிப்புகளுக்கு குறிப்பிட்டது, மேலும் சந்தையில் கிடைக்கும் பிற மருந்து தயாரிப்புகள் குறித்து எந்த கவலையும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    செப்டம்பரில், சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து ஒரு மாதிரி, போலி மருந்தாக அடையாளம் காணப்பட்டது, இது ஒரு அங்கீகரிக்கப்படாத உற்பத்தியாளரால் மற்றொரு நிறுவனத்திற்குச் சொந்தமான பிராண்ட் பெயரைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. இந்த விஷயம் விசாரணையில் உள்ளது, மேலும் சட்டம் மற்றும் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த மருந்துகள் அடையாளம் காணப்பட்டு சந்தையில் இருந்து அகற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, மாநில கட்டுப்பாட்டாளர்களுடன் இணைந்து நிலையான தரம் இல்லாதவை மற்றும் போலி மருந்துகளை அடையாளம் காணும் இந்த நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படுகிறது.

    • மனித மூளை சுருங்கும் வேகத்தை குறைத்து மூளையின் செயல்பாட்டை பாதுகாக்க உதவுகிறது என்று தெரியவந்தது.
    • நினைவுத்திறன் இழப்பை தடுக்க மிகச்சிறந்த மருந்து என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    பகலில் தூங்குவது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஒரு கருத்து உள்ளது. ஆனால், பகலில் குட்டி தூக்கம் என்பது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருவதாக உருகுவே நாட்டில் ஒரு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்து உள்ளது.

    இந்த ஆய்வுக்காக 40 முதல் 69 வயதுடைய 35 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர், அவர்களிடம் பகல் நேர தூக்கம் மூளை ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை கண்டறிய `மெண்டலியன் ரேண்டமைசேஷன்' எனப்படும் ஒரு நுட்பம் பயன்படுத்தப்பட்டது. பகல் நேர குட்டி தூக்கம், வயதாகும்போது மனித மூளை சுருங்கும் வேகத்தை குறைத்து மூளையின் செயல்பாட்டை பாதுகாக்க உதவுகிறது என்று தெரியவந்தது.

    இதே போல வேறொரு ஆய்வில், `டெர்சிமோனியன் லைர்ட்' என்ற நுட்பத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட 291 விளையாட்டு வீரர்களிடம் நடைபெற்றது. ஒரு சாதாரண இரவு தூக்கத்திற்கு பிறகு, பகலில் அரை மணி நேரம் குட்டித்தூக்கம் போடுவது அறிவாற்றல் மற்றும் உடல் செயல்திறனை மேம்படுத்தி, உடல், மனதில் ஏற்படும் சோர்வு உணர்வை குறைத்து புத்துணர்ச்சியை ஏற்படுத்தியதாக கண்டறியப்பட்டது.

    இந்த 2 ஆய்வு முடிவுகளின்படி, ஒரு இரவு வழக்கமான சாதாரண தூக்கம் மட்டுமின்றி பகலில் 30 நிமிடங்கள் குட்டித்தூக்கம் தூங்குவது என்பது வயதாகும் காலத்தில் மூளை சுருக்கத்தை தடுத்து, நினைவுத்திறன் இழப்பை தடுக்க மிகச்சிறந்த மருந்து என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • எலிகளில் இருந்து இந்த வகை புழு தொற்றுகள், நேரடியாக மனிதர்களுக்கு பரவுவது இல்லை.
    • சிலருக்கு கல்லீரல் செயலிழப்பு வரை ஏற்படும் அபாயமும் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

    வீடுகளில் பொதுவாக கொசுத் தொல்லையும், எலித் தொல்லையும் இருக்கும். கொசுவால் மலேரியா காய்ச்சல் வரும். டெங்கு காய்ச்சல் வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

    இப்போது எலியால் கல்லீரல் காலியாகிவிடும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. வீடுகளில் காணப்படும் கருப்பு எலிகளில் 4-ல் ஒரு எலிக்கு சி.ஹெப்பாடிகா என்ற புழு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    தமிழ்நாடு விலங்கு மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 55 எலிகளை பிடித்து ஆராய்ச்சி செய்துள்ளார்கள். அதில் 38 சதவீத எலிகளில் இந்த தொற்று இருக்கிறது. அதாவது 10 எலிகளில் 4 எலிகள் இந்த பாராசைட்டை சுமக்கின்றன.

    சென்னையில் உள்ள மக்கள் தொகை பெருக்கமும், மக்களோடு வாழும் இந்த எலிகளின் வாசமும் மனிதர்களுக்கும் பிற விலங்குகளுக்கும்கூட மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

    எலிகளில் இருந்து இந்த வகை புழு தொற்றுகள், நேரடியாக மனிதர்களுக்கு பரவுவது இல்லை. இந்த புழுவின் முட்டைகள் எலியின் கல்லீரலில் உருவாகிறது. ஆனால் அதன் மலத்தின் வழியே வெளியேறாது.

    இறந்து போன எலிகளை சாப்பிடும் பூனைகள், நாய்கள் அல்லது பாம்புகள் வழியாக அந்த முட்டை மண்ணில் கலக்கிறது. பிறகு மண்ணில் இருந்து மனிதர்களுக்கு தொற்றுகிறது. அவ்வாறு மனித உடலில் தொற்றிக் கொள்ளும் இந்த புழுவின் முட்டைகள் மனிதர்களின் கல்லீரலில் சென்று குடியேறி விடுகிறது. இதனால் கல்லீரல் அழற்சி, கல்லீரல் பெரிதாகுவது, காய்ச்சல், சோர்வு வரை ஏற்படும். சிலருக்கு கல்லீரல் செயலிழப்பு வரை ஏற்படும் அபாயமும் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

    இந்த மாதிரி தொற்று உலக அளவில் 175 பேருக்கு இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அதில் ஒருவர் சென்னையை சேர்ந்தவர்.

    இந்த நோயை கண்டறிவதும் சவாலானது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள. ஏனெனில் கல்லீரலில் இருந்து 'பயாப்சி' எடுத்துதான் இதை உறுதிப்படுத்த முடியும். மற்ற எலிகள் மூலம் பரவும் வேறு தொற்றுக்களோடும் இந்த தொற்றை குழப்ப வாய்ப்பு இருப்பதால் கண்டுபிடிப்பதிலும், உறுதிப்படுத்துவதிலும் கூடுதல் கவனம் தேவை என்கிறார்கள்.

    ஆரம்ப நிலைகளில் எந்தவிதமான அறிகுறிகளும் தெரியாமல் இருக்கலாம். தொற்று ஏற்பட்ட சில வாரங்களுக்கு பிறகோ, சில மாதங்களுக்கு பிறகோ கூட அறிகுறிகள் தோன்றலாம். அது உடலில் இருக்கும் முட்டைகளின் எண்ணிக்கையை பொறுத்தது.

    பொதுவான அறிகுறியாக காய்ச்சல், வயிற்று வலி, கல்லீரல் பருமன் போன்றவை ஏற்படலாம். கண்டுபிடிக்காமல் விட்டால் கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டு மரணத்துக்கும் வழிவகுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

    • கிடைக்கும் நேரத்தில் திருப்பி தாக்கும் வேலையை செய்கின்றன என்பதும் தெரியவந்துள்ளது.
    • யாரெல்லாம் முகமூடி அணிந்து சென்றார்களோ அவர்களை எல்லாம் கூட்டமாக சேர்ந்து தாக்கின.

    காகத்தின் அறிவுத்திறன் 7 வயது சிறுவனின் மூளைக்கு சமமாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். 2012-ம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வின்படி, விஞ்ஞானிகள் இதை தெரிவித்தனர்.

    காகங்கள் மனித முகங்களை நினைவில் வைத்துக்கொள்ளும் அசாத்தியமான நினைவாற்றல் படைத்தவை ஆகும். தனது இனத்திற்கு எதிரான தாக்குதல் நடத்திய மனிதர்களை தங்கள் வாரிசுகளுக்கும், மற்ற காக்கை கூட்டத்திற்கு அடையாளம் காட்டி, கிடைக்கும் நேரத்தில் திருப்பி தாக்கும் வேலையை செய்கின்றன என்பதும் தெரியவந்துள்ளது.

    வாஷிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 2 ஆராய்ச்சியாளர்கள், மனிதன் மீது காக்கைகள் நடத்தும் தாக்குதலை பற்றி தெரிந்து கொள்ள ஒரே மாதிரியான முகமூடி அணிந்த சிலரை வைத்து காகங்களை பிடித்து, வெவ்வேறு இடங்களில் அடைத்து விட்டனர்.



    அடைபட்ட இந்த காக்கைகள் ஒரு சில தினங்கள் கழித்து திறந்து விடப்பட்டன. திறந்து விடப்பட்ட காகங்கள், அது பறந்து சென்ற இடங்களில் எல்லாம் யாரெல்லாம் முகமூடி அணிந்து சென்றார்களோ அவர்களை எல்லாம் கூட்டமாக சேர்ந்து தாக்கின.

    இதன் மூலம், காக்கைகள் தங்களை துன்புறுத்தும் மனிதர்களை எத்தனை காலம் ஆனாலும் திருப்பி தாக்கும் அளவுக்கு நினைவுத்திறனை கொண்டுள்ளன என்றும் தெரியவந்து உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    • மன அழுத்தத்தை உணரும்போது அதற்கான காரணங்களை அடையாளம் காண வேண்டும்.
    • எந்தெந்த காரணிகள் நமக்கு பிரச்சனையை ஏற்படுத்துகின்றன என்பதை பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

    இளைஞர்களில் பலர் எல்லாவற்றிலிருந்தும் அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். கல்வி, வேலை, நிதி சிக்கல்கள், அதிகரித்த செல்போன் பயன்பாடு, போட்டித்தன்மை போன்ற பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது.

    கடுமையான மன அழுத்தத்தில் இருப்பவர்களிடையே பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரித்து வருவதாக அமெரிக்க நரம்பியல் அகாடமி எச்சரித்துள்ளது.

    வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக அதிகரித்து வரும் மன அழுத்தம் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அது விளக்கம் அளித்துள்ளது.

    இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூளையின் ஒரு பகுதிக்கு ரத்த விநியோகம் துண்டிக்கப்படுகிறது. அவர்கள் சோம்பேறியாக மாறுகிறார்கள், பேச முடியாத நிலை ஏற்படும். அவர்கள் பார்வையை இழக்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில் மரணம் ஏற்படுகிறது.



    பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பு கடுமையான மன அழுத்தத்தை அனுபவித்ததாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

    பின்லாந்தில் உள்ள ஹெல்சின்கி பல்கலைக்கழக மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவ நிறுவனங்கள் இந்த ஆய்வில் பங்கேற்றன. மன அழுத்தத்தில் இருக்கும்போது. கார்டிசோல் அட்ரினலின் மற்றும் நோராட்ரெனலின் போன்ற ஹார்மோன்கள் வெளியிடப்படுகின்றன.

    சிறிது மன அழுத்தத்துடன் இந்த ஹார்மோன்கள் உடலுக்கு அவசியமானவை. ஆனால் அவை அதிகமாக வெளியிடப்பட்டால் ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

    இது உறுப்புகளை சேதப்படுத்தும் மன அழுத்தம் மூளை மற்றும் இதயம் உட்பட அனைத்து உறுப்புகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    தொடர்ச்சியான மன அழுத்தம் நினைவாற்றலைக் குறைக்கிறது. படிக்கும் திறன் குறைகிறது. முடிவுகளை சரியாக எடுக்க முடியாது. கவனம் குறைகிறது. உணர்ச்சிகளில் அதன் தாக்கத்தால் பயம் மற்றும் பதட்டம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் ஆபத்தானது. சிலர் எடை கூடுகிறார்கள். சிலர் எடை குறைகிறார்கள். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பாலியல் திறன் குறைகிறது. மனச்சோர்வு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

    மன அழுத்தத்தை உணரும்போது அதற்கான காரணங்களை அடையாளம் காண வேண்டும். எந்தெந்த காரணிகள் நமக்கு பிரச்சனையை ஏற்படுத்துகின்றன என்பதை பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

    நீங்கள் விரும்பும் விஷயங்களைச் செய்வது உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தைச் செலவிட வேண்டும். இயற்கையில் நடப்பது. தியானம் செய்வது, இசை கேட்பது. புத்தகங்கள் படிப்பது மற்றும் நடனம் ஆடுவது ஆகியவை உதவும்.

    நீண்ட நேர செல்போன் பயன்பாடுகளை தவிர்க்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களை விட்டுவிட்டு நேர்மறை சிந்தனையை ஏற்றுக்கொள்ள வேண்டும். மன அழுத்தத்தைக் குறைப்பது நம் கையில்தான் உள்ளது. நமது வாழ்க்கை முறையிலும் உணவு முறையிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

    சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்து புரதம் அதிகம் உள்ள உணவுகளை உண்ணுங்கள். தேவைப்பட்டால் ஒரு உணவியல் நிபுணரின் ஆலோசனையுடன் சீரான உணவை உண்ணுங்கள். தினமும் அரை மணி நேரம் வாரத்தில் குறைந்தது 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.

    எல்லாவற்றிலும் மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அறிவாற்றல் நடத்தை சிகிச்சையைப் பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • குறைந்தபட்சம் 100 சிகரெட் பிடித்த இளைஞர்கள் புகைப்பழக்கத்தை நிறுத்த விரும்புவதாகவும், ஆனால் விட முடியாமல் தவிப்பதாகவும் கூறியுள்ளனர்.
    • புகையிலை பழக்கம் கொண்டவர்களுக்கு சுவாச பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய் பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது.

    இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடையே அதிகரித்து வரும் புகைப்பழக்கம் தொடர்பாகவும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும் ஆய்வு நடந்தப்பட்டது. அதன் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

    பள்ளிகள் இருக்கும் இடங்களில் 100 மீட்டர் தொலைவுக்குள் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்கு தடை உள்ளது. மேலும் தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும் தடை உள்ளது.

    ஆனால் பல இடங்களில் பள்ளிகளின் அருகில் உள்ள கடைகளில் சிகரெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் குட்கா உள்ளிட்ட பொருட்களும் தடையின்றி கிடைக்கிறது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் 7 வயதிலேயே புகைப்பழக்கத்துக்கு அடிமையாவதாக ஆய்வுகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளன.

    இந்தியாவில் 11.4 சதவீத சிறுவர்கள் தங்களின் 7 வயதிலேயே சிகரெட் பிடிக்க தொடங்குகிறார்கள். 17.2 சதவீதம் சிறுவர்கள் பீடி புகைக்கிறார்கள். 24 சதவீத சிறுவர்கள் 7 வயதிலேயே குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை உட்கொள்கிறார்கள்.

    இந்தியாவில் 13 முதல் 15 வயதுக்கு உள்பட்ட 3.7 கோடி சிறுவர்கள் புகையிலை பயன்படுத்துகிறார்கள். தினமும் புகைபிடிக்கும் பெரியவர்களில் 87 சதவீதம் பேர் தங்களின் 18 வயதில் முதல் முறையாக புகைப்பழக்கத்தை தொடங்கியதாக தெரிவித்து உள்ளனர். 95 சதவீதம் பேர் தங்களின் 21 வயதில் புகைப்பழக்கத்தை தொடங்கியுள்ளனர். குறைந்தபட்சம் 100 சிகரெட் பிடித்த இளைஞர்கள் புகைப்பழக்கத்தை நிறுத்த விரும்புவதாகவும், ஆனால் விட முடியாமல் தவிப்பதாகவும் கூறியுள்ளனர்.

    சென்னையிலும் பள்ளிகளின் அருகில் பெரும்பாலான கடைகளில் சிகரெட் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் பள்ளிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் உள்ள 392 கடைகளில் தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சென்னையில் 86 தொடக்கப்பள்ளிகளின் அருகில் 176 கடைகளிலும், 129 மேல்நிலைப்பள்ளிகளின் அருகில் 193 இடங்களிலும், 32 கல்லூரிகளின் அருகில் 67 கடைகளிலும் புகையிலை பொருட்கள் விற்கப்படுகின்றன.

    புகையிலை பழக்கம் கொண்டவர்களுக்கு சுவாச பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய் பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது. குறிப்பாக வாய் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை, 20 முதல் 39 வயதுக்குட்பட்ட ஆண்களில் 1 லட்சம் பேரில் 3.5 பேர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதுவே 2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் 1 லட்சம் பேரில் 9.7 பேர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே வயதுடைய பெண்களில், அதே காலகட்டத்தில் ஒரு லட்சத்திற்கு 0.8 ஆக இருந்த வாய் புற்றுநோய் பாதிப்பு 1.1 ஆக அதிகரித்துள்ளது.

    சென்னையில் பள்ளிகளின் அருகில் உள்ள மளிகை கடைகள், பெட்டிக்கடைகள், பல்பொருள் அங்காடிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சில இடங்களில் எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் சிகரெட் விற்பனை செய்வது கண்டறியப்பட்டுள்ளது.

    இதையடுத்து மாணவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • அதிக அளவு சர்க்கரை உள்ள காபி குடிப்பது நல்லதல்ல என்றும் கூறப்படுகிறது.
    • தினமும் 2-3 கப் குடிப்பவர்களுக்கு இந்த நன்மை 17 சதவீதம் ஆக சற்று அதிகரித்துள்ளது.

    தினமும் அதிகாலையில் பால் இல்லாத 'பிளாக்' காபி குடிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது என்று புதிய ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. தி ஜர்னல் ஆப் நியூட்ரிஷன் நடத்திய புதிய ஆய்வில், காலையில் காபி குடிப்பதால் இறப்பு அபாயத்தைக் குறைப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது .

    காபி நுகர்வுக்கும் இறப்பு ஆபத்துக்கும் இடையிலான தொடர்பு, பானத்தில் சேர்க்கப்படும் இனிப்புகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்பின் அளவைப் பொறுத்து இது மாறுவதாக கண்டறிந்துள்ளனர்.

    ஒரு நாளைக்கு 1 முதல் 2 கப் பிளாக் காபி குடிப்பது இறப்பு அபாயத்தையும், இருதய நோயால் ஏற்படும் உயிரிழப்பையும் குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.



    எனினும், அதிக அளவு சர்க்கரை உள்ள காபி குடிப்பது நல்லதல்ல என்றும் கூறப்படுகிறது. குறைந்த அளவு சர்க்கரை சேர்க்கப்பட்ட காபி குடிப்பதால் இறப்புக்கான ஆபத்து 14 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த ஆய்வு, 1999-ம் ஆண்டு முதல் முதல் 2018-ம் ஆண்டு வரையிலான தேசிய சுகாதார மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு கப் காபி குடிப்பதால், எந்த காரணத்தாலும் இறக்கும் அபாயம் 16 சதவீதம் குறைவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தினமும் 2-3 கப் குடிப்பவர்களுக்கு இந்த நன்மை 17 சதவீதம் ஆக சற்று அதிகரித்துள்ளது.

    இருப்பினும், 3 கப்களுக்கு மேல் குடிப்பது ஆரோக்கியமானது இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். காபி குடிப்பதற்கும் புற்றுநோயால் பாதிப்பு ஏற்பட்டு இறப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • 2021-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த ஆய்வில் 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்தது.
    • தமிழகத்தில் தற்போது கொரோனா நோயின் தீவிர தன்மை மிகப்பெரும் அளவுக்கு குறைந்தே இருப்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதாக கடந்த 2 வாரங்களாக தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த வைரஸ் அதிக வீரியம் இல்லாதது என்பதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    இந்த நிலையில் தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வு தகவல் இன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகத்தில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மக்கள் மத்தியில் எப்படி உள்ளது? என்பது தொடர்பாக இதுவரை 5 கட்டங்களாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 2020 அக்டோபர் மாதம் முதல் கட்ட ஆய்வு நடந்த போது தமிழக மக்களில் 32 சதவீதம் பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த 2-ம் கட்ட ஆய்வில் 29 சதவீதம் பேருக்கும், மே மாதம் நடந்த ஆய்வில் 70 சதவீதம் பேருக்கும் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது உறுதியானது. 2021-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த ஆய்வில் 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரிய வந்தது.

    தற்போது (2025) கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் தமிழக மக்களில் 97 சதவீதம் பேருக்கு கொரோனா நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா நோயின் தீவிர தன்மை மிகப்பெரும் அளவுக்கு குறைந்தே இருப்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு பொது சுகாதாரம் இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது.

    • ஆண், பெண் பாலினங்களுக்கு இடையே செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பில் வேறுபாடுகள் கண்டறியப்பட்டன.
    • ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

    செல்போன்கள் தற்போது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் செல்போன்களில் திரையை தள்ளிக்கொண்டே இருக்கிறார்கள்.

    ரீல்ஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்கள் என எப்போது பார்த்தாலும் அதிக அளவில் இளைஞர்கள் இதில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

    இதில் யாருக்கு அதிக அளவில் ஆபத்து மற்றும் மன அளவில் பதட்டத்தை அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது என்பது குறித்து சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

    இதில் 25 வயது உடைய 104 ஆண்கள் 293 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த சிலரை இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். அவர்கள் அனைவரும் 100 சதவீதம் தொடர்ந்து ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வந்தனர் .

    இந்த ஆய்வின் முடிவில் ஆண், பெண் பாலினங்களுக்கு இடையே செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பில் வேறுபாடுகள் கண்டறியப்பட்டன.

    அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் இளம்பெண்கள் மனம் நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.

    ஸ்மார்ட்போன் அதிக அளவில் பயன்படுத்தும் பெண்கள் அதிக துன்பங்களை எதிர்கொள்ள கூடும். ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு நாளும் போன் பயன்படுத்துவதால் சமூகப் பதட்டத்தை அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிக அளவில் ஏற்படுவது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    மேலும் மன உளைச்சல், தீங்கு விளைவிக்கும் நடத்தை, தற்கொலை எண்ணம் அதிகரிப்பதற்கு இந்த ஸ்மார்ட்போன் பயன்பாடு காரணங்களாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    சிக்கலான ஸ்மார்ட்போன் பயன்பாடு இளைய தலைமுறையினர் இடையே உள்ள பிரச்சனையை தீர்ப்பதற்கும் அதன் காரணம் மற்றும் விளவுகளை கண்டறிய தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • சி.எச்.ஆர்.ஐ.ஆல் கணக்கெடுக்கப்பட்ட 22 கட்சிகளில் மொத்தம் 1,595 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.
    • பொதுக்கூட்ட ஏற்பாடுகளுக்காக ரூ.130 கோடி செலவிடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி அரசியல் கட்சிகள் பெற்ற நிதி விபரங்கள் மற்றும் பிரசாரம், விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் குறித்த விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தன.

    இதில் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க., தெலுங்கு தேசம், மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு, எல்.ஜே.பி. (ராம்விலாஸ்), சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்.டி.எப்) மற்றும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏ.ஐ.யூ.டி.எப்.) ஆகிய 6 கட்சிகளிடம் ரூ.4,300 கோடி அதிகமாக நிதி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக காமன்வெல்த் மனித உரிமைகள் முன் முயற்சி (சி.எச்.ஆர்.ஐ.) அமைப்பின் இயக்குனர் வெங்கடேஷ் நாயக் ஒரு ஆய்வை நடத்தி உள்ளார். அதில் தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., தெலுங்கு தேசம் கட்சி, ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, ஜனதா தளம் உள்ளிட்ட 17 மாநில கட்சிகள் என 22 கட்சிகள் 2024-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் மற்றும் 4 மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட போது ரூ.11,326 கோடி தொடக்க இருப்பு வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

    தேர்தல் செயல்பாட்டின் போது ரூ.7,416 கோடி திரட்டி உள்ளன. அதில் ரூ.3,861.6 கோடி செலவு செய்துள்ளனர். தேர்தல் முடிந்த நாளில் ரூ.14,848 கோடி மொத்த இறுதி இருப்பு தொகை இருப்பது தெரியவந்துள்ளது. ஆய்வின்படி பா.ஜ.க. அதிகபட்சமாக ரூ.5,921.8 கோடி தொடக்க இருப்பு தொகையுடன் முதல் இடத்தில் உள்ளது. காங்கிரஸ் தொடக்க இருப்பு தொகையை அடிப்படையில் 22 கட்சிகளில் 9-வது இடத்தை பிடித்தது. இறுதி இருப்பு தொகை பொறுத்த வரை காங்கிரஸ் 12-வது இடத்தில் உள்ளது.

    சி.எச்.ஆர்.ஐ.ஆல் கணக்கெடுக்கப்பட்ட 22 கட்சிகளில் மொத்தம் 1,595 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. அவர்களில் 480 பேர் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆய்வின்படி 22 கட்சிகள் பெற்ற மொத்த தொகையில் 84.5 சதவீதம் பாஜ.க. திரட்டியுள்ளது. அந்த கட்சியின் மொத்த தேர்தல் செலவு ரூ.1,738 கோடி என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது.

    இது 22 கட்சிகளில் மொத்த பிரசார செலவில் 45 சதவீதமாகும். ஊடக விளம்பரங்களுக்காக 22 கட்சிகளும் சேர்ந்து ரூ.992.4 கோடிக்கு மேல் செலவிட்டன. பொதுக்கூட்ட ஏற்பாடுகளுக்காக ரூ.130 கோடி செலவிடப்பட்டுள்ளது.

    • அதிகப்படியான டீ பதட்டத்தை அதிகரிக்கும்.
    • வெறும் வயிற்றில் அதிகமாக டீ குடிப்பது வாயு மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.

    டீ குடிப்பது உற்சாகமாக உணர வைக்கிறது. உடலில் ஏற்படும் சோர்வைக் குறைக்க பலர் டீ அருந்துகிறார்கள். அவர்கள் பலமுறை டீ பருகுவதை ரசிக்கிறார்கள்.

    ஆனால் அதிகமாக டீ குடிப்பதால் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டு, பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அதிகமாக டீ, காபி குடித்தால் பிரச்சனைகள் உங்களுக்குத் தெரியாமலேயே உங்களைச் சூழ்ந்து கொள்ளலாம்.

    ஒரு நாளைக்கு 2-3 கப் டீ, காபி (200-300 மிலி) குடிப்பது பாதுகாப்பானது. ஆற்றலை அதிகரிக்கிறது. மேலும் ஆக்ஸிஜனேற்றிகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இந்த அளவை பரிந்துரைக்கிறது.

    தேசிய சுகாதார நிறுவனங்கள் ஒரு நாளைக்கு 4-5 கப், 400 மி.கி.க்கு மேல் டீ உட்கொண்டால் தூக்கத்தைக் கெடுக்கும் என்று கூறுகிறது. அதிகப்படியான டீ பதட்டத்தை அதிகரிக்கும்.



    வெறும் வயிற்றில் அதிகமாக டீ குடிப்பது வாயு மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.

    டீ, காபியில் உள்ள டானின்கள் இரும்பு உறிஞ்சுதலைத் தடுக்கின்றன. ஒரு நாளைக்கு 5 கப் அளவுக்கு மேல் குடிப்பது இரத்த சோகை அபாயத்தை அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.

    அதிகப்படியான டீ உட்கொள்வது ஒழுங்கற்ற இதயத் துடிப்புகளை ஏற்படுத்தும். அமெரிக்க இதய சங்கம் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

    உணவுக்கு பிறகு டீ, காபி குடிக்கவும், ஒரு நாளைக்கு 3 கப் அளவுக்கு அதிகமாக குடிக்க வேண்டாம். அது அதிகமாக இருந்தால், மூலிகை டீக்களுக்கு மாறுங்கள். இது ஆரோக்கியத்தை பேணுவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என அறிவுறுத்தியுள்ளனர். 

    • ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்கு ஒருமுறை டீ, காபி, குளிர்பானம் வழங்கப்பட்டது.
    • குளிர்பானங்களை அறவே தவிர்ப்பது நல்லது என தெரிவித்தனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள டாட்டா இன்ஸ்டியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச் நிலைய ஆராய்ச்சியாளர்கள் சில எலிகள் மூலம் சர்க்கரை நோய் குறித்து ஆராய்ச்சி செய்தனர்.

    அப்போது சில எலிகளுக்கு ஒரு நாளைக்கு 4 முதல் 5 தடவை 100 மில்லி லிட்டர் அளவுள்ள சர்க்கரை கலந்த இனிப்பான டீ, காபி மற்றும் குளிர்பானங்களை கொடுத்தனர்.

    ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்கு ஒருமுறை டீ, காபி, குளிர்பானம் வழங்கப்பட்டது. 2 ஆண்டுகள் நடந்த ஆராய்ச்சி முடிவில் அனைத்து எலிகளுக்கும் சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் ஏற்பட்டது தெரியவந்தது.

    இதன் மூலம் ஒரு நாளைக்கு தினமும் 2 வேளை இனிப்பான டீ காபி குடிப்பவர்களுக்கு டைப்-2 சக்கரை வியாதி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    எங்களுடைய ஆராய்ச்சி அமெரிக்கா தேசிய சுகாதார நிறுவன ஆய்வு மூலம் உலகளாவிய உணவு முறை தளர்வுகளுடன் ஒப்பிடப்பட்டன. டீ, காபியில் உள்ள சுக்ரோஸ் என்ற அமிலம் கல்லீரல் தசைகள் மற்றும் சிறுகுடல்களில் கடுமையான விளைவுகள் ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

    சர்க்கரை இல்லாத டீ, காபி குடிக்க முயற்சி செய்யுங்கள். குளிர்பானங்களை அறவே தவிர்ப்பது நல்லது என அவர்கள் தெரிவித்தனர்.

    ×